செவ்வாய், 27 நவம்பர், 2012

20000 வருடங்களுக்கு முந்தைய தமிழன் நாடு - குமரிகண்டம்


2000 வருடங்களுக்கு முந்தையவர்கள் அல்ல நாம். உண்மையில் 20000 வருடங்களுக்கு முந்தையவர்கள். நாம் வாழ்ந்த இடம் குமரிகண்டம். மேலும் விவரங்களுக்கு kumarikandam

வியாழன், 22 நவம்பர், 2012

ஏதோ சொல்ல தோணுது!

படம்-1


படம்-2

என்னோட மொபைல் கேமராவில் நான் வெவ்வேறு இடங்களில் எடுத்த புகைப்படம் இவை . இதை பார்க்கும் போது ஏதோ சொல்ல தோணுது! ஆனா சொல்றதுக்கு வார்த்தை வரல! நீங்களே வார்த்தைகளை கற்பனை பண்ணிக்கங்க !

வியாழன், 15 நவம்பர், 2012

சைட் அடிக்க முடியல


மாலை நேரத்துல கிராமத்துல ரோட்டோராத்துல நைட்டிய போட்டுட்டு நடந்து போற வயசு பொண்ணுங்களை பார்த்தா! அவ்வளவு அழகா இருக்காங்க ஆனா அவங்கள சைட் அடிக்கத்தான் மனசு வரல! காரணம் - கழிப்பறை வசதி இல்லாம ரோட்டோரமா உட்கார்ரதுக்கு வர்ற பொண்ணுங்கள எப்படி சைட் அடிக்கமுடியும்? மனசுதான் வலிக்குது  ! இதை சொன்னா என்னை பைத்தியம்னு சொல்வாய்ங்க ! 

சனி, 10 நவம்பர், 2012

இதை எத்தனைபேர் படிப்பீர்கள் ?

கற்பி,ஒன்றுசேர்,கலகம் செய் ! - அம்பேத்கர் 

         "ஓர் அடிமைக்கு அவன் அடிமை என்பதை முதலில் உணர்த்து பிறகு, அவன் தானாகவே கிளர்ந்து எழுவான் " என்று ஒடுக்கப்பட்ட இந்திய மக்களின் விடிவெள்ளி யாக வந்தவர் புரட்சியாளர் அம்பேத்கர் .
             1891 ஏப்ரல் 14 ம் தேதி மும்பையின் மகர் என்னும் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்தார் அம்பேத்கர் . வகுப்பறையில் தண்ணீர் குடிக்க கூட அனுமதி இல்லை அந்த அளவுக்கு சாதி வெறி . இந்த அவமானங்கள் சாதிய அமைப்புக்கு எதிராக அம்பேத்கரை கிளர்ந்து எழ செய்தது பரோடா மன்னரின் உதவியால் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்தார்.லண்டனில் சட்டம் முடித்தார் இந்திய திரும்பியவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக சட்ட ரீதியாகவும் சமூக ரீதியாகவும் போராட்டங்களை முன்னெடுத்தார் சவ்தார் ஏரியில் தலித்துகள் இறங்கியதால் மந்திரம் ஓதி தீட்டு கழித்தனர். இதை கண்டித்து ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி மனித நீதிக்கு எதிரான மனுநீதியை கொளுத்தினார் .
                இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எழுத்து வடிவம் கொடுத்த அம்பேத்கர் விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் ஆனார்
               " இந்தியாவில் ஒரு தோட்டியின் மகன் தோட்டியகதான் மாற வேண்டும் என்பது கருவிலேயே தீர்மானிக்க படுகிறது . இந்துவாக பிறந்த நான் ஒருபோதும் இந்துவாக சாக மாட்டேன் " என்ற அம்பேத்கர் லட்சகணக்கான மக்களுடன் பௌத்ததில் சேர்ந்தார் 
               அம்பேத்கர் என்ற பெயர் கொண்டதால் அவரும் தாழ்த்த பட்டவர் என ஒரு IAS அதிகாரியையே ஒதுக்கி வைத்த நாடு நம் நாடு

    தீண்டாமை, தேசத்தின் நோயாக இருக்கும் வரை அம்பேத்கரின் தேவைகளும் இருந்தே தீரும் !

ஞாயிறு, 4 நவம்பர், 2012

நான் ஒரு அரை பைத்தியமா?

என்னோட மொபைல்-ல வாங்கி பார்த்த என்  நண்பன் வால்பேப்பர்-ல என்னோட  புகைப்படத்த பார்த்துட்டு ஏன் நடிகர்களோட போட்டோவ வைக்கலேன்னு கேட்டான் அதுக்கு நான் " கஷ்டப்பட்டு கடன வாங்கி மொபைல் ல வாங்கி இருக்கேன் இந்த மொபைல் லுக்கு நாந்தாண்ட ஹீரோ " னு சொன்னேன் அதுக்கு என்  நண்பன் என்னை மொறச்சு பார்த்துட்டு " நீ ஒரு அரை பைத்தியம்டா-னு சொல்றான் நீங்களே! சொல்லுங்க! நான் அரை பைத்தியமா?

புதன், 31 அக்டோபர், 2012

சுபாஷ் சந்திரபோஸ் - மரணம் ஒரு மர்மம்


காந்திக்கு சமமாக மதிக்கப்பட்ட நபர். இந்திய சுதந்திரத்திற்காக இரண்டாம் உலகப் போரில் பிரிட்ஸ் ஐ எதிர்த்த நாடுகளிடம் உதவி கேட்க சென்றார். 1945ம்   வருடம் ,ஆகஸ்ட் 18ம் தேதி டோக்யோ வுக்கு பறந்து கொண்டு இருந்த போஸ், தைவானுக்கு மேல் பறக்கும் போது வானிலேயே விமானம் வெடித்து இறந்தார் என்று ஒரு தகவல் . ஆனால் ,1999-2005 சமயத்தில் நடைபெற்ற நீதிபதி முகர்ஜி தலைமையிலான விசாரணை யில் குறிப்பிட்ட தேதியில் அப்படி ஒரு விமான விபத்தே நடக்க வில்லை என செய்திகள் கிடைத்தன . அது மட்டுமல்ல ; ' போஸ் ன் சாம்பல் ' என்று ஜப்பானில் வைக்கப்பட்டு இருந்தது அவருடைய சாம்பலே அல்ல என்றும் அறிவித்தது முகர்ஜி குழு . இன்னமும் போஸ் எங்கோ வெளிநாட்டில் உயிருடன் இருக்கிறார் என்று நம்புபவர்கள் இருக்கிறார்கள் ! நாமும் தேடுவோம் 

வியாழன், 25 அக்டோபர், 2012

பிரபலங்களின் இறுதி நிமிடங்கள்

தாமஸ் ஆல்வா எடிசன் :
                                         
 " விளக்கை எரிய விடுங்கள் என் ஆவி பிரியும்போது வெளிச்சம் இருக்கட்டும் "

பெஞ்சமின் பிராங்க்ளின் :

                       " இறக்கும் மனிதனால் எதையும் எளிதாக செய்ய முடியாது "

டயானா :
       
                                       " கடவுளே என்ன நடந்தது எனக்கு? "

கிளியோபாட்ரா :
                                       
        பூ நாகத்தை கையில் பிடித்துக்கொண்டு , " ஆஹா ... இதோ .... என் முடிவு இங்கே இருக்கிறது "

நெப்போலியன் :

                                             " பிரான்ஸ் ...ஆர்மி ....ஜோசபின் ! "

கர்ம வீரர் காமராஜ் :

                    தன் உதவியாளரிடம், " வைரவா ! விளக்கை அணைத்துவிடு " 

சனி, 20 அக்டோபர், 2012

சாதிய முகம்


ஒவ்வொருத்தர் வீட்லேயும் இருக்குற தலைவர்களின் படமே சொல்லாம சொல்லுது அவங்களோட சாதிய வெறிய ! இன்னைக்கு சட்ட வல்லுனரா இருக்குற வழக்கறிஞர் யாரோட ஆபீஸ்லயாவது அம்பேத்கர் படம் இருக்கா? பிறகு தீண்டாமை எப்படி ஒழியும் ? கேட்கனும்னு தோனுச்சு அதான் கேட்டேன் !

வியாழன், 18 அக்டோபர், 2012

கந்தசாமி மாமா

கந்தசாமியும் அகத்திகீரையும் 

     
 கந்தசாமி மாமா என் வாழ்க்கைல மறக்க முடியாத நபர் . மரம் ஏறுவதை தொழிலாக கொண்டவர் . ஒருமுறை மரம் ஏறும் போது தவறி கிழே விழுந்துட்டார் . அதோட அவரோட வாழ்க்கையும் கிழே விழுந்துடுச்சு .

 அவரோட இடுப்பு உடைஞ்சுடுச்சு . அதுக்கப்புறம் கட்டில்தான் வாழ்க்கையா மாறிடுச்சு . ஒருமுறை அவரை பார்க்கும் பொது  அவர் சொன்ன வார்த்தைகள் மறக்க முடியாதது .
 நல்லா இருக்கும் பொது நம்மளை எல்லோரும் தேடுவாங்க ஆனா வாழ்க்கைல தோத்துட்டா சாவு கூட நல்லா வராது .
        
சில நாட்களுக்கு பிறகு அவரை பார்க்க போனேன் ஆனா அவர் உயிரோட இல்லை . அவர் இறக்கும் வயது இல்லை . விசாரிச்சு பார்க்கும் பொது சாராயம்  குடிச்சுட்டு அகத்தி கீரை சாப்பிட்டாராம் நடக்க முடியாதவருக்கு சாராயம் எப்படி வந்திருக்கும் அதை குடிச்சுட்டு அகத்திகீரை சாப்பிட்டால் இறந்திருவாங்கனு அவருக்கு தெரியாமலா இருக்கும் . இதை கொலைன்னு எடுத்துக்கவா இல்லை கருணை கொலைன்னு எடுத்துக்கவா . 

கந்தசாமி மாமா எனக்கு நல்லா ஒரு விஷயத்தை புரிய வைத்திட்டார்   " வாழ்க்கை ரெம்ப சின்னது "

புதன், 17 அக்டோபர், 2012

வைரமுத்து

வைரமுத்து வாழ்க்கை குறிப்பு 
கவிப்பேரரசு வைரமுத்து 1953-ஆம் ஆண்டு ஜூலை 13-ஆம் தேதி மதுரை மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த வடுகபட்டி என்னும் கிராமத்தில் ஓர் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.

தந்தை பெயர்: திரு. இராமசாமித் தேவர்
தாயார் பெயர்: திருமதி. அங்கம்மாள்

கிராமத்தின் இயற்கை நேசத்திலிருந்து இவருக்குக் கவிதை எழுதும் ஆர்வம் பிறந்தது. பன்னிரெண்டு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றலைப் பெற்றார். வடுகப்பட்டியில் உயர்நிலைப்பள்ளிக் கல்வியை முடித்த பின்னர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ.தமிழ் இலக்கியம் பயின்று கல்லூரியிலே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று 'தங்கப்பதக்கம்' பரிசு பெற்றார். மரபு ரீதியான கவிதைகளில் தொடங்கி புதுக்கவிதையை நோக்கிய பரிணாமம் இவர் பயணம். தமிழ்நாட்டின் புதுக்கவிதை முன்னோடிகளின் ஒருவர். கல்லூரிப் பருவத்தில் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் பல கவியரங்கு மேடைகளில் பங்குபெற்று கவிதைத் துறையில் புகழ்பெற்றுத் திகழ்ந்தார். 19-ஆம் வயதில் பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படிக்கும்போது இவருடைய முதல் கவிதைத் தொகுதி வைகறை மேகங்கள் வெளிவந்தது. கதை- கவிதை- கட்டுரை என்ற வடிவங்களில் இதுவரை பதினெட்டு நூல்கள் எழுதியிருக்கிறார். இதுவரை 'நான்' என்ற பெயரில் இவர் தன் 28 வயதிலேயே சுயசரிதை எழுதியிருக்கிறார். உலகமொழிக் கவிதைகள் தமிழில் அறிமுகப்படுத்தும் இவரது எல்லா நதியிலும் என் ஓடம் என்னும் நூலை அண்மையில் முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டார். பரிசு பெற்ற கவிராஜன் கதை என்ற பாரதியாரின் வாழ்க்கை வரலாற்று நூல் புதுக்கவிதையில் எழுதப்பட்டிருப்பது தமிழிலக்கியத்தில் முதல் முயற்சி. இவரது பல நூல்கள் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் பாடங்களாக வைக்கப்பட்டிருக்கின்றன.
                                                    
1980-ல் நிழல்கள் திரைப்படத்தின் மூலம் இயக்குநர் பாரதிராஜா இவரைப் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தினார். 1981-ம் ஆண்டின் சிறந்த பாடலாசிரியராகத் தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களால் விருது வழங்கப் பெற்றார்.
1985-ம் அண்டு முதல் மரியாதை படத்தில இவர் எழுதிய பாடல்கள் இவருக்கு அகில இந்திய சிறந்த பாடலாசிரியர் என்று அளவில் ஜனாதிபதியின் தேசிய விருதைப் பெற்றுத் தந்தன. பின்னர் ரோஜா, கருத்தம்மா, சங்கமம், கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களில் எழுதிய பாடல்களுக்கும் இவருக்கு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. மொத்தம் 5 தேசிய விருதுகள் பெற்றுள்ளார். மேலும் இதுவரை நாற்பதுக்கும் மேற்பட்ட கலை இலக்கிய அமைப்புகளும். மன்றங்களும். பத்திரிகைகளும் ஆண்டுதோறும் சிறந்த பாடலாசிரியராக இவரைத் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கியுள்ளன. நட்பு திரைப்படத்தின் மூலம் கதை- வசனகர்த்தாவாக அறிமுகமானார். நட்பு ஓடங்கள் வண்ணக்கனவுகள். அன்றுபெய்த மழையில் ஆகிய படங்கள் இவர் வசனம் எழுதியவைகளில் சிறப்பு பெற்ற படங்களாகும். 1986-ஆம் ஆண்டில் சென்னை தமிழ் வளர்ச்சி மன்றத்தால் கவியரசு கண்ணதாசனுக்குப் பிறகு கவியரசு என்னும் பட்டத்தை இவர் பெற்றுள்ளார். இந்தோ சோவியத் கலாசாரக் கழகத்தின் தமிழ்நாடு மாநிலத் துணைத் தலைவராக இருந்து வரும் இவர் ரஷ்ய நாட்டு அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் 1987-ஆம் ஆண்டு ரஷ்யா சென்று வந்தார். தமிழ் அமைப்புகள் அழைப்பின்பேரின் அண்மையில் அமெரிக்கா சென்று வந்துள்ள இவர். மேலும் மலேசியா. சிங்கப்பூர். ஐக்கிய அரபு நாடுகளுக்கும் சென்று வந்துள்ளார்.

திங்கள், 15 அக்டோபர், 2012

ஒற்றை தலைவலி


ஒற்றை தலைவலி போக 

        * ஒரு  வாணலியில் நல்லெண்ணெயை ஊற்றி, அதில் தும்பை பூக்களை போட்டு, காய்ச்சி வடிகட்டிக்   கொள்ளவும்.     பின் அந்த எண்ணெயை வாரத்திற்கு ஒரு முறை தேய்த்து, வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்து வர வேண்டும். இதனால் அடிக்கடி வரும் தலைவலி மற்றும் நீர்க்கோர்வையால் ஏற்படும் தலைபாரம் போன்றவையும் குணமாகிவிடும்.

      * தாய்ப்பாலில் சிறிது கிராம்பை அரைத்து போட்டு, பேஸ்ட் போல் செய்து அதனை தலைக்கு பற்று போட்டால்,    சைனஸால் ஏற்படும் தலைவலி நீங்கும்.
      * தலைக்கு குளித்தப் பின், சாம்பிராணி புகையை போட்டு, தலையை காயவைத்துக் கொள்வது போல், ஓமம், சிறிது மஞ்சள் போட்டு, அதனால் வரும் புகையை நுகர்ந்து கொண்டால், ஜலதோஷம், நீர்க்கோர்வை போன்றவை சரியாகும்.
      * குப்பைமேனி, கீழாநெல்லி போன்ற செடிகளின் இலையை சாறு பிழிந்து, அந்த சாற்றின் அளவிற்கு நல்லெண்ணெயை கலந்து, சூடேற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த எண்ணெய் ஆறியதும், அதனை மூக்கினுள் விட்டால், நாள்பட்ட தலைவலி மற்றும் மூக்கினுள் ஏற்படும் குடைச்சல் போய்விடும்.
      * கடுகு சிறிது, கஸ்தூரி மஞ்சள், சிறிது சாம்பிராணி ஆகியவற்றை பொடி செய்து, தண்ணீரில் கலந்து, படுக்கும் முன் நெற்றிக்குத் தடவி, காலையில் கழுவ வேண்டும். இல்லையென்றால் கிராம்பு, சுக்கு ஆகிய இரண்டையும் அரைத்து, நீரில் பேஸ்ட் போல் கலந்து, மூக்கு மற்றும் நெற்றியில் தடவ வேண்டும். இதனால் நீர்க்கோர்வை, தலைபாரம், ஜலதோஷம் போன்றவை விரைவில் குணமாகும்.
எனவே மேற்கூறியவற்றையெல்லாம் செய்து, சைனஸ்-ஆல் வரும் பிரச்சனையை ஈஸியான முறையில் வீட்டிலேயே சரிசெய்யலாம்.

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

கருப்பு தங்கம் யா நாங்க

WOW

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவரைப் பிடிக்கும். சிலருக்கு கலராக இருப்பவர்களைப் பிடிக்கும், சிலருக்கு மாநிறமாக அதாவது சற்றே கருப்பு நிறமாக இருப்பவர்களை ரொம்பப் பிடிக்கும். ஆனால் இப்படி கருப்பு நிறத்தை விரும்புவோர் கிட்டத்தட்ட மைனாரிட்டிதான். பெரும்பாலானவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் போல சுண்டினால் ரத்தம் வரும் கலரில் உள்ளவர்களைத்தான் பிடிக்கிறது. இப்படிப்பட்ட நிலையில், கருப்பு நிறத்திற்கு என்ன குறைச்சல் என்று சேலையை வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பியுள்ளது சென்னையைச் சேர்ந்த வாவ் என்ற வுமன் ஆப் ஒர்த் அமைப்பு.

கருப்பு நிறமே சிறப்பு, கருப்புக்கு நிகராக எதுவும் இல்லை, கருப்புதான் எங்களுக்குப் பிடிச்ச கலரு என்று கோஷம் போடாத குறையாக இந்த அமைப்பு கலக்கலாக கிளம்பியுள்ளது. இந்த அமைப்பின் இயக்குநராக இருப்பவர் கவிதா இம்மானுவேல். சமீபத்தில் இந்த அமைப்பு சென்னையில் ஒரு பேரணியை நடத்தியது. அதில் ஏகப்பட்ட பேர்கலந்து கொண்டு கருப்பு நிறத்திற்கு ஜே போட்டனர்.
வாவ் என்பது வுமன் ஆப் ஒர்த் என்பதின் சுருக்கமாம். இது ஆணாதிக்க சமுதாயம். பெண்கள் அழகாக இருந்தால்தான் மதிக்கிறார்கள், பெருமையாக பார்க்கிறார்கள். ஆனால் இது தவறு என்பதை நிரூபிக்கவே இந்த அமைப்பை தொடங்கினோம். கருப்பு நிறப் பெண்களும் திறமையானவர்கள், அழகானவர்கள், உயர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்கவே இந்த அமைப்பு பாடுபடுகிறது.

குழந்தை பிறந்தது முதலே பவுடர் போடுவது, கிரீம் தடவுவது என்று கெடுத்து விடுகிறது இந்த சமுதாயம். பெண்கள் வளரவளர அவர்களுக்கு மேக்கப் அது இதென்று, கருப்பு நிறம் என்றால் அலர்ஜியாக்கி விடுகிறார்கள். இது மகா தவறு என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். நமது நிஜமான கலருக்கு மட்டுமே மரியாதை தர வேண்டும். செயற்கைப் பூச்சு என்றுமே நிரந்தரமல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் ஒரு நிறம் என்பது இயற்கை. அதை அப்படியே ஏற்பதுதான் நியாயம். அதை விட்டு விட்டு கருப்பு நிறமாக இருந்தால் தவறு, அசிங்கம், அவலட்சணம் என்று பேசுவது முட்டாள்தனம் என்று ஆவேசமாக பேசுகிறார் கவிதா.
கருப்பு நிறமாக இருப்பவர்களும் கூட அழகானவர்கள்தான். தங்களது முகத்திற்கேற்ற, நிறத்திற்கேற்றவாறு ஹேர் ஸ்டைல் உள்ளிட்டவற்றை மாற்றிக் கொண்டால் கருப்பு நிறத்தினரும் கூட களையாகத்தான் இருப்பார்கள் என்பது இவரது வாதம்.

நாமதான் இங்கு கருப்பு, சிவப்பு என்று பார்க்கிறோம். நமது நாட்டைச் சேர்ந்த செக்கச் செவேல் என்ற கலரில் இருப்பவர்கள் கூட அமெரிக்காவுக்கோ அல்லது லண்டனுக்கோ போனால் அவர்களை கருப்பர்கள் என்றுதான் வெள்ளைக்காரர்கள் அழைக்கிறார்கள். அப்போ்து இவர்கள் எங்கு போய் தங்களது முகத்தை வைத்துக் கொள்வார்கள் என்று இடிப்பது போல கேட்கிறார் கவிதா.
கருப்பு நிறமாக இருப்பவர்களே கவலையேபடாதீர்கள், சூப்பர்ஸ்டாரே நம்ம கலர்தான், ஜமாய்ங்க, சாதியுங்க...

சனி, 13 அக்டோபர், 2012

மனம் மருந்து மனிதநேயம்

படித்ததில் பிடித்தது !

மனம் மருந்து மனிதநேயம்


அறிவு அது பட்டறிவாக இருக்கலாம். அல்லது படிப்பறிவாக இருக்கலாம். எந்த அறிவாக இருந்தாலும் அதற்கு ஒரு எல்லை உண்டு. ஆனால் எல்லை இல்லாத்து நம் சிந்தனைதான். படித்தவர்களெல்லாம் அறிவாளியாக ஆவதில்லை. தலைவர்களாக உருவாவதில்லை. அது அவரவர்களின் செயல்மட்டும் சிந்தனை உரத்தை பொறுத்தது.


வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நின்றவர் யார்?
என்ற பழைய சினிமா பாடல் இங்கு நினைவுக்கு வருகிறது. நாம் எந்தத் துறையைச் சார்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
உதாரணமாக: நீங்களும் மருத்துவரக, தொழிலதிபராக, வழக்கறிஞராக, பொறியாளராக, கல்வி போதிக்கும் பேராசிரியராக, பொழுது போக்கு அளிக்கும் நடிகராக இருக்கலாம். அவர் எந்த்துறையைச் சார்ந்தவராக இருந்தாலும் மனித நேயம் கொண்டவராக இருக்க வேண்டும். அப்போதுதான் அவர் செய்யும் தொழிலில் சிறந்தும், உயர்ந்தும் இருக்க முடியும். இல்லாவிட்டால் அவருக்கு சமூகத்தில் முகவரி என்பது கிடைப்பது அரிதாகும்.
மனம் மருந்தைவிட சக்தி வாய்ந்தது. அதனால்தான் நம்பிக்கை இல்லாத மருத்துவம் முற்றிலும் பயனளிக்காது.

ஒரு நர்சு நோயாளியிடம் சொல்கிறார் பெரிய டாக்டர் வெளியே சென்றிருக்கிறார் வர நேரமாகும். சின்ன டாக்டர் இருக்கிறார் அவரிடம் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அதற்கு நோயாளி சொல்கிறார், பரவாயில்லை எவ்வளவு நேரமானாலும் பெரிய டாக்டரிமே பரிசோதனை செய்து கொள்கிறேன். அவர் வரும் வரை நான் காத்திருக்கிறேன். இந்த உரையாடல் என்ன சொல்கிறது. நம்பிக்கை தான் காக்க வைக்கிறது. நம்பிக்கை தான் மருந்தாகிறது. நம்பிக்கை தான் குணமளிக்கிறது. அந்த நம்பிக்கையை ஏற்படுத்துவது தான் மருத்துவர்களின் தலையாய கடமையாக இருக்க வேண்டும்.
ஆடையைக் கிழித்துக் கொண்டு சாலையில் திரிபவர் மட்டும் மன நோயாளி அல்ல. கோபத்தின் உச்சியில் சென்று கடைசியில் கொலை செய்யும் அளவிற்கு செல்பவரும், தேர்வில் தோல்வி என தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களும், காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்ளும் இளைஞர்களும், கணவன் – மனைவி உறவுகளில் சந்தேகமும், புகுந்த வீடா, பொறந்தவீடா என்று போட்டியில் விவாகரத்து வரை செல்லும் பெண்களும், பணிபுரியும் இடங்களில் ஆடவரின் பாலியல் தொந்தரவால் மன உளைச்சலுக்கு ஆளாகும் இளம் பெண்களும், தற்போது மென்பொருள் கணினி துறையில் தன்னைவிட
 அதிகம் சம்பாதிக்கும் இளைஞர்களைப் பார்த்து தாழ்வு மனப்பான்மை கொள்ளும் பெற்றோர்களுக்கும், பெரியோர்களுக்கும் ஏற்படும் மன அழுத்தம், விரக்தி, இவைகளெல்லாம் ஒரு விதமான மனநோய்தான் என்பதை மனநோய் வல்லுநர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
தற்போது வெளிநாடுகளில் காலச்சார சீரழிவு காரணமாக சர்வ சாதாரணமாக இளைஞர்கள் மனவெறி பிடித்து துப்பாக்கி எடுத்துக் கொண்டு அங்காடி மையங்களிலும், பொது இடங்களிலும், ஏன் பள்ளிகளிலும் தன்னுடன் படிக்கும் மாணவ மாணவிகளையும், ஆசிரியர்களையும், பேராசிரியர்களையும் காக்கை குருவி போல் சுட்டுத் தள்ளுகிறார்கள். இந்த செய்திகள் தினம் தினம் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு காரணமென்ன?
மன அழுத்தம் (Mental stress), மனநிலையில் தடுமாற்றம், இயலாமை, விரக்தி, இவையெல்லாம் எல்லை தாண்டி போகும்போது மனிதன் மிருகமாகிறான். இவையே மனதிலிருந்து உடல் நோயாக மாறுகிறது. உதாரணமாக இரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், ஒற்றைத் தலைவலி, மாத விடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலி, தூக்கமின்மை, தீராத சளித்தொல்லை & தும்மல் (Sinusitis), குடல் புண் (Ulcer) போன்றவை.
இதற்கெல்லாம் தீர்வுதான் என்ன?
அவசர உலகம் – அதிசய உலகம்
யார் இதை கட்டிக் காப்பது?
அந்தக் காலத்தில் திருவள்ளுவர், திருமூலர், 18 சித்தர்கள் இருந்தார்கள். அதன் பிறகு கௌதம புத்தர், இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், முகம்மது நபிகள், வள்ளலார், வேதாத்திரி மகரிஷி என மகான்கள் நமக்கு ஞானத்தைக் கொடுக்க, அறிவைக் கொடுக்க, ஆற்றலைக் கொடுக்க, ஆரோக்கியத்தைக் கொடுக்க, ஆனந்தத்தைக் கொடுக்க அவ்வப்போது தோன்றிக் கொண்டேயும் இருக்கிறார்கள். அதைப்பற்றி கவலைப்படாமல், சிந்திக்காமல் இருந்துவிட்டோம். தற்போது சூழ்நிலை அந்த ஞானக் கருத்துகளை பின்பற்றியே ஆகவேண்டும் என்ற சூழ்நிலை வந்து கொண்டிருக்கிறது. தற்போது மனிதநேயம் பற்றி சிந்திப்பதும் இல்லை. அன்பு என்ற வார்த்தையே யாருக்கும் தெரிவதில்லை. மனித வளம் சீர்கெட்டு வருகிறது. அதற்கு மனிதவள மேம்பாட்டுக் குழுக்கள் அதிகம் தேவைப்படுகிறது. மருந்துக்கு முன்பாக மனநல ஆலோசனை தேவைப்படுகிறது. மருந்துக்கு முன்பாக மனநல ஆலோசனை தேவைப்படுகிறது.
தாமரைச்செல்வன் ஆ
Author: 

கண்ணதாசன் பற்றி சுவையான சிறு குறிப்புகள்

கண்ணதாசன் பற்றி சுவையான சிறு குறிப்புகள்
காட்டுக்கு ராஜாசிங்கம். கவிதைக்கு ராஜாகண்ணதாசன்!’ பெருந்தலைவர் காமராஜரின் வாக்கு இது `நான் நிரந்தரமானவன்அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்று கண்ணதாசனே அறிவித்தார். கவிரசத்தின் சில துளிகள்...

` கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல. `அழகான கண்களைப்பற்றி வர்ணிப்பதிலும்வர்ணிக்கப்பட்டதைப் படப்பதிலும் ஆசை அதிகம். அதனால் இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன்’ என்பது அவரே அளித்த விளக்கம். பெற்றோர் வைத்த பெயர் முத்தையா.
` சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்குத் தத்துக் கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன். அந்த வீட்டில் அவர் பெயர்நாராயணன்.
`கலங்காதிரு மனமேஉன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’ என்று`கன்னியின் காதலியில்’ எழுதியது முதல் பாட்டு. மூன்றாம் பிறையில் வந்த, `கண்ணே கலைமானே’ கவிஞரின் கடைசிப் பாட்டு.
எப்போதும் மஞ்சள் பட்டுச் சட்டைவேட்டி அணிந்திருப்பார். திடீரென்று கழுத்து,கைகளில் நகைகள் மின்னும் திடீரென்று காணாமல் போய்விடும்.`பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கு’ என்று அவை அடகுவைக்கப்பட்டு இருப்பதைச் சொல்வார்.
`மயிலாப்பூர் உட்லண்ட்ஸ் ஹோட்டல், அபிராமபுரம் கவிதா ஹோட்டல் இரண்டும் தான் கவிஞருக்குப் பிடித்த இடங்கள். பெரும்பாலான பாடல்கள் பிறந்தது இங்குதான். வெளியூர் என்றால் பெங்களூர் உட்லண்ட்ஸ்.
வேட்டியின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டு அறைக்குள் நடந்தபடி பாடல்களின் வரிகளைச் சொல்வார். நடந்துகொண்டே இருந்தால்தான் சிந்தனை துளிர்க்கும். கவிதைவரிகள் சொல்லும்போது செருப்பு அணிய மாட்டார்!
`கொஞ்சம் மது அருந்திவிட்டால்என் சிந்தனைகள் சுறுசுறுப்படைவது வழக்கம். அதைப்போல் இன்ப விளையாட்டில் எனக்கு ஆசை உண்டென்றாலும்சிந்திக்கிற நேரத்தில் ரதியே வந்தாலும் திரும்பி பார்க்க மாட்டேன்’ என்பது கவிஞரின் வாக்குமூலம்.

’முத்தான முத்தல்லவோ’ பாட்டைத்தான் மிகக் குறைவான நேரத்துக்குள் (10 நிமிடங்கள்) எழுதி முடித்தார். அதிக நாட்களுக்கு அவரால் முடிக்க முடியாமல் இழுத்தது. `நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழப்பதில்லை!’’
கண்ணதாசன் அடிக்கடி கேட்கும் பாடல், `திருப்பாற்கடலில் பள்ளிக்கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா,’ தனக்குப்பிடித்த பாடல்களாக, `என்னடா பொல்லாத வாழ்க்கை,’’ `சம்சாரம் என்பது வீணை’’ ஆகிய இரண்டையும் சொல்லியிருக்கிறார்.
கண்ணதாசனுக்குப் பிடித்த இலக்கியம் கம்பராமாயணம்,`நான் பாடல் இயற்றும் சக்தியைப் பெற்றதே அதில் இருந்ததுதான்’ ’என்பார்.
காமராசர் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க விரும்பினார். சில காட்சிகளையும் எடுத்தார். ஆனால் முற்றுப்பெறவில்லை!
ஆரம்ப காலத்தில் வேலை எதுவும் கிடைக்காததால்சந்திரமோகன் என்று பெயர் மாற்றிக்கொண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறார். பிற்காலத்தி; `பராசக்தி’,`ரத்தத்திலகம்’’,`கறுப்புப்பணம்’, `சூரியகாந்தி’.’ உள்ளிட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார்.
முதல் மனைவி பெயர் பொன்னம்மா,அடுத்த ஆண்டே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குத் தலா ஏழு குழந்தைகள். 50-வது வய்தில் வள்ளியம்மையைத் திருமணம் செய்தார். இவர்களுக்குப் பிறந்தவர்தான் விசாலி. மொத்தம் 15 பிள்ளைகள்!
படுக்கை அறையில் வைத்திருந்த ஒரே படம் கிருஷ்ணர். வெளிநாடு போவதாக இருந்தால்சாண்டோ சின்னப்பா தேவர் வீட்டுக்குப் போய்அவர் பூஜை அறையில் இருக்கும் முருகனை வணங்கிவிட்டுத்தான் செல்வார்!
`கண்ணதாசன் இறந்துவிட்டார்’’ என்று இவரே பலருக்கும் போன் போட்டு வதந்தியைக் கிளப்பிவீடு தேடிப் பலரும் அழுது கூடிவிடபிறகு இவரே முன்னால் தோன்றிச் சிரித்த சம்பவம் நடந்திருக்கிறது.
`உங்கள் புத்தங்கள் அனைத்தையும் படிக்கும் ஒருவனுக்கு உங்களது புத்திமதி என்னஎன்று கேட்டபோதுஅவர் சொன்ன பதில்... புத்தங்களைப் பின்பற்றுங்கள். அதன் ஆசிரியரைப் பின்பற்றாதீர்கள்!’
தன்னுடைய பலவீனங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு சுயவரலாறு எழுதியவர்,`வனவாசம்,மனவாசம் இரண்டும் ஒருவன் எப்படி வாழக்கூடாது என்பதற்கான உதாரணங்கள்’ என்றார்.
காமராசர்அண்ணாஎம்.ஜி.ஆர்,கருணாநிதி ஆகிய நான்கு பேரையும் அதிகமாகப் பாராட்டியவரும்திட்டியவரும் இவரே! ஈ.வெ.கி.சம்பத்.ஜெயகாந்தன்,சோ,பழ.நெடுமாறன் ஆகிய நான்கு பேரும் அரசியல் ரீதியாக நெருக்கமான நண்பர்கள். `கவிஞரின் தோரணையை விட அரசனின் தோரணைதான் கவிஞரிடம் இருக்கும்’ என்பார் ஜெயகாந்தன்.
திருமகள்திரையொலிமேதாவிசண்டமாருதம் ஆகியவை இவர் வேலை பார்த்த பத்திரிகைகள்தென்றல்தென்றல்திரைமுல்லைகடிதம்,கண்ணதாசன் ஆகியவை இவரே நடத்தியவை.
திருக்கோஷ்டியூர் தொகுதியில் முதல் தடவை நின்றார். தோற்றார். அதன் பிறகு தேர்தலில் நிற்கவே இல்லை.`இது எனக்குச் சரிவராது’’ என்றார்.
`குடிப்பதும்தவறுக்கென்றே தங்களை ஒப்புக்கொடுத்துவிட்ட பெண்களுடன் ஈடுபடுவதும்ஒரு தனி மனிதன் தன் உடல்நிலைக்கும் வசதிக்கும் ஏற்ப செய்யும் தவறுகளே தவிரஅதனால் சமுதாயத்தின் எந்த அங்கமும் பாதிக்கப்படுவதில்லை’ என்று தனது தவறுகளுக்கு வெளிப்படையான விளக்கம் அளித்து உள்ளார்.
`பிர்லாவைப்போலச் சம்பாதித்து ஊதாரியைப்போலச் செலவழித்துபல நேரங்களில் பிச்சைக்காரனைப் போல ஏங்கி நிற்கும் வாழ்க்கைதான் என்னுடையது’ என்பது அவர் அளித்த வாக்குமூலம்.
தான் வழக்கமாகப் படுத்துறங்கும் கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட கட்டிலுடன் தன்னை எரிக்க வேண்டும் என்பது கண்ணதாசனின் கடைசி விருப்பம்!
`அச்சம் என்பது மடமையடா, `சரவணப் பொய்கையில் நீராடி, `மலர்ந்தும் மலராத..., `போனால் போகட்டும் போடா.., `கொடி அசைந்ததும், `உன்னைச் சொல்லிக் குற்றமில்லை, `கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்,`எங்கிருந்தாலும் வாழ்க, `அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும், `சட்டி சுட்டதடா கை விட்டதடா...ஆகிய 10 பாடல்களும் தமிழ் வாழும் காலம் முழுவதும் இருக்கும் காவியங்கள்
இறப்புக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே தனக்குத்தானே இரங்கற்பா எழுதிவைத்துக்கொண்டார். அதன் கடைசி வரி இப்படி முடியும்...
  `ஏற்றிய செந்தீயே நீ எரிவதிலும்
   அவன் பாட்டை எழுந்து பாடு!