செவ்வாய், 27 நவம்பர், 2012

20000 வருடங்களுக்கு முந்தைய தமிழன் நாடு - குமரிகண்டம்


2000 வருடங்களுக்கு முந்தையவர்கள் அல்ல நாம். உண்மையில் 20000 வருடங்களுக்கு முந்தையவர்கள். நாம் வாழ்ந்த இடம் குமரிகண்டம். மேலும் விவரங்களுக்கு kumarikandam

வியாழன், 22 நவம்பர், 2012

ஏதோ சொல்ல தோணுது!

படம்-1


படம்-2

என்னோட மொபைல் கேமராவில் நான் வெவ்வேறு இடங்களில் எடுத்த புகைப்படம் இவை . இதை பார்க்கும் போது ஏதோ சொல்ல தோணுது! ஆனா சொல்றதுக்கு வார்த்தை வரல! நீங்களே வார்த்தைகளை கற்பனை பண்ணிக்கங்க !

வியாழன், 15 நவம்பர், 2012

சைட் அடிக்க முடியல


மாலை நேரத்துல கிராமத்துல ரோட்டோராத்துல நைட்டிய போட்டுட்டு நடந்து போற வயசு பொண்ணுங்களை பார்த்தா! அவ்வளவு அழகா இருக்காங்க ஆனா அவங்கள சைட் அடிக்கத்தான் மனசு வரல! காரணம் - கழிப்பறை வசதி இல்லாம ரோட்டோரமா உட்கார்ரதுக்கு வர்ற பொண்ணுங்கள எப்படி சைட் அடிக்கமுடியும்? மனசுதான் வலிக்குது  ! இதை சொன்னா என்னை பைத்தியம்னு சொல்வாய்ங்க ! 

சனி, 10 நவம்பர், 2012

இதை எத்தனைபேர் படிப்பீர்கள் ?

கற்பி,ஒன்றுசேர்,கலகம் செய் ! - அம்பேத்கர் 

         "ஓர் அடிமைக்கு அவன் அடிமை என்பதை முதலில் உணர்த்து பிறகு, அவன் தானாகவே கிளர்ந்து எழுவான் " என்று ஒடுக்கப்பட்ட இந்திய மக்களின் விடிவெள்ளி யாக வந்தவர் புரட்சியாளர் அம்பேத்கர் .
             1891 ஏப்ரல் 14 ம் தேதி மும்பையின் மகர் என்னும் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்தார் அம்பேத்கர் . வகுப்பறையில் தண்ணீர் குடிக்க கூட அனுமதி இல்லை அந்த அளவுக்கு சாதி வெறி . இந்த அவமானங்கள் சாதிய அமைப்புக்கு எதிராக அம்பேத்கரை கிளர்ந்து எழ செய்தது பரோடா மன்னரின் உதவியால் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்தார்.லண்டனில் சட்டம் முடித்தார் இந்திய திரும்பியவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக சட்ட ரீதியாகவும் சமூக ரீதியாகவும் போராட்டங்களை முன்னெடுத்தார் சவ்தார் ஏரியில் தலித்துகள் இறங்கியதால் மந்திரம் ஓதி தீட்டு கழித்தனர். இதை கண்டித்து ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி மனித நீதிக்கு எதிரான மனுநீதியை கொளுத்தினார் .
                இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எழுத்து வடிவம் கொடுத்த அம்பேத்கர் விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் ஆனார்
               " இந்தியாவில் ஒரு தோட்டியின் மகன் தோட்டியகதான் மாற வேண்டும் என்பது கருவிலேயே தீர்மானிக்க படுகிறது . இந்துவாக பிறந்த நான் ஒருபோதும் இந்துவாக சாக மாட்டேன் " என்ற அம்பேத்கர் லட்சகணக்கான மக்களுடன் பௌத்ததில் சேர்ந்தார் 
               அம்பேத்கர் என்ற பெயர் கொண்டதால் அவரும் தாழ்த்த பட்டவர் என ஒரு IAS அதிகாரியையே ஒதுக்கி வைத்த நாடு நம் நாடு

    தீண்டாமை, தேசத்தின் நோயாக இருக்கும் வரை அம்பேத்கரின் தேவைகளும் இருந்தே தீரும் !

ஞாயிறு, 4 நவம்பர், 2012

நான் ஒரு அரை பைத்தியமா?

என்னோட மொபைல்-ல வாங்கி பார்த்த என்  நண்பன் வால்பேப்பர்-ல என்னோட  புகைப்படத்த பார்த்துட்டு ஏன் நடிகர்களோட போட்டோவ வைக்கலேன்னு கேட்டான் அதுக்கு நான் " கஷ்டப்பட்டு கடன வாங்கி மொபைல் ல வாங்கி இருக்கேன் இந்த மொபைல் லுக்கு நாந்தாண்ட ஹீரோ " னு சொன்னேன் அதுக்கு என்  நண்பன் என்னை மொறச்சு பார்த்துட்டு " நீ ஒரு அரை பைத்தியம்டா-னு சொல்றான் நீங்களே! சொல்லுங்க! நான் அரை பைத்தியமா?